Monday 4 August 2008

இந்திய நாட்டின் நீதித் துறை!


சமீபத்தில் நீதித் துறை சம்பந்தமாக இந்திய அரசு வெளியிட்ட சில புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் (2007 டிசம்பர் 31) எடுக்கப்பட்ட புள்ளி விவர கணக்கின் படி, இந்தியாவின் 21 உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 43 ஆயிரத்து அறுபது ஆகும்! சென்னை உயர் நீதி மன்றத்தில் மட்டும் உள்ள வழக்குகள் 4 லட்சத்து 28 ஆயிரத்து 832. அவற்றில் 3,92,824 சிவில் மற்றும் 36,008 கிரிமினல் வழக்குகள் ஆகும். அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 876 என்றாலும் உண்மையில் 594 நீதிபதிகள் மட்டுமே 2008 ஏப்ரல் 22 இன் கணக்கு படி பணியில் இருந்தவர்கள்! அதாவது, அன்றே 282 காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. "தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதி" என்ற தத்துவத்தை இந்திய அரசு ஏற்கவில்லை போலும்!

No comments: