"தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி" என்பதை நினைவுபடுத்தும் வகையில் அறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உச்ச நீதி மன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது!
கோவை நீதி மன்றம் ஒன்றில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு துவங்கிய ஒரு வழக்கு பல்வேறு ஆண்டுகள் சென்னை உயர் நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்களில் அறுபத்தி இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு கடைசியில் உச்ச நீதி மன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு முடிவடைந்தது.
1946-ஆம் ஆண்டு சக்கரை வியாபாரம் தொடர்பாக அம்மாசை கவுண்டர் என்பவரால் கிருஷ்ணசாமி முதலியார் என்பவருக்கேதிராக தொடரப்பட்ட ஒரு சிறு வழக்கே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வாகியுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக்கிடப்பதால் ஏற்படும் தாமதத்துக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment